ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஹோ ஹோ.., ஹோ ஹோ.., ஹோ.., ஹோ.., ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., பூவையர் உள்ளத்தில், இந்த மௌனம் சம்மதமே, பூவையர் உள்ளத்தில், இந்த மௌனம் சம்மதமே, சம்மதம் என்றே தான், அந்த ஜாடை சொல்லிடுமே, சம்மதம் என்றே தான், அந்த ஜாடை சொல்லிடுமே, வரவேண்டும் நல்ல துணை, தரவேண்டும் வாழ்வுதனை, நிலையாகும் உறவு முறை, பெறவேண்டும் இறுதி வரை.., என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலை கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, ஆண்:- புன்னகை அள்ளி வர, நடை போடும் பொன்மயிலே, புன்னகை அள்ளி வர, நடை போடும் பொன்மயிலே, அன்பெனும் பள்ளியிலே, புது மாணவியானவளே, அன்பெனும் பள்ளியிலே, புது மாணவியானவளே, விழி தானே சொல்லித் தரும், மனம் தானே எழுதி வரும், ஒரு நாளில் பழகி விடும், உடல் தானே துள்ளி விழும்.., என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஆண்:- அனுபவம் உண்டானால், இந்த ரகசியம் புரியாதோ, பெண்:- பெண்மையின் சன்னதியில், வந்து பார்த்தால் தெரியாதோ, ஆண்:- அலை போலே குழல் அசைய, பெண்:- இலை போலே நடை பயில, ஆண்:- வளை ஓசை இசை கொடுக்க, பெண்:- வருவேனே இணைந்திருக்க, ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், பெண்:- என் கேள்விக்கென்ன பதில், ஆண்:- உன் பார்வைக்கென்ன பொருள், பெண்:- மணமாலை கொண்டு வரும், இருவரும்:- திரு நாளும் என்று வரும்.., ம்ம்ம்.., ம்.., - UYARNDHA MANITHAN (உயர்ந்த மனிதன்)
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்...
நான் வாழ யார் பாடுவார்...???
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்...???
(எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..)
பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது
பொல்லாத மனம் என்று பேர் வந்தது...
வழி இல்லாத ஏழை, எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சம் என்னோடு பகையானது.....
(எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..)
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்??
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்..
ஞாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யார் என்று அப்போது நீ காணலாம்..
(எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..)
உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எது என்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை, மொழி இல்லாத பிள்ளை,
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்...
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் - இனி
என் பாதை நான் கண்டு நான் போகலாம்,
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்,
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்...
(எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..)
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே - இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
.
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
.
காஞ்சித் தலைவன் கோவில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக்குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?
திருமகளே உன் புன்னகையோ?
.
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
.
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
.
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே.
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
(ஒளிமயமான)
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
(ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக