மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

இனியவளே என்று பாடி வந்தேன்

 

 

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓஹோ….ஊ…..ஏ….ஆ…..

பெண் : ஆஹா ஆ…..ஹா….
ஏஹேஹேஹே ஆஹாஹா

பெண் : ஓஹோ….ஓஹோஹோ ஹோ

ஆண் : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
இனியவளே என்று பாடி வந்தேன்

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ஆஹா ஹா ஹா ஹா…..

ஆண் :
இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண் : ஆஹா ஹா ஹா ஹா…..
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்

ஆண் : ஓராயிரம் காலம்
இந்த உள்ளம் ஒன்றாக

பெண் : ஒன்றானவர் வாழ்வே
இன்ப வெள்ளம் என்றாக

ஆண் : துணை தேடி வரும் போது
கண்ணில் என்ன நாணமோ

பெண் : குணம் நாட்டில் உருவான
பெண்மை என்ன கூறுமோ

ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்
ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்

ஆண் : பொன் மாலையில்

பெண் : பூமாலையை

ஆண் : நெஞ்சில் சூடவோ

பெண் : சூடவோ

ஆண் : சூடவோ

பெண் : இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்

ஆண் : தாலாட்டிடும் நெஞ்சம்
தன்னைத் தங்கம் என்றானோ

பெண் : பாராட்டிடும் இன்பம்
தன்னை மங்கை கண்டாளோ

ஆண் : நினைத்தாலும் சுகம் தானே
இந்த நெஞ்சின் காவியம்

பெண் : கொடுத்தாலும் நலம் தானே
என்னைக் கொஞ்சும் ஓவியம்

ஆண் : இதழால் உடல் அளந்தாள்

பெண் : இவளோ தன்னை மறந்தாள்

ஆண் : இதழால் உடல் அளந்தாள்

பெண் : இவளோ தன்னை மறந்தாள்

ஆண் : ஏனென்பதை

பெண் : யார் சொல்வது

ஆண் : இன்னும் மௌனமேன்

பெண் : மௌனமேன்

ஆண் : மௌனமேன்

ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண் : ஆ….லாலாலலா ஓஹோஹஓஹோ
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ….ஓஹ்ஹோ ஓஹ்ஹோ…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக