மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 20 டிசம்பர், 2017

காற்றுக்கென்ன வேலி ! கடலுக்கென்ன மூடி ? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது

படம்:- அவர்கள் (1977); இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன்; வரிகள்:- கண்ணதாசன்; பாடியவர்:- எஸ். ஜானகி; நடிப்பு:- சுஜாதா, ரவிகுமார்.

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது  மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது . நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று  நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்னக் கட்டுப்பாடு காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு . காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது  மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது . தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்  சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன் பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப் பேசி கிள்ளை ஆனேன்  கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்  . காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக